7.வல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; |
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : ||
நீ கோதை ! உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று என்று சொல்கிறார்களே அது உன் செவி போல் உள்ளது. அதற்கு வல்மீகம் என்று பெயர். அதிலிருந்து உண்டானவர் வால்மீகி .ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன். அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்.
.Goda ! The Maharishi, who emerged from the ant–hill, which is your ear, became Mahaakavi —emperor among all
kavis. This is true and there is no wonder in these honey–like pasurams (prabandas)flowed from your lotus face
8 போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த : |
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை :
Chருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா : || |
பகவான் உனக்கு மிக மிகப் பிரியமானவன் அவனை உன்னைப் போல் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும் வந்துவிட்டது.உள்ளம் கனிந்து ,அவனையே நினைத்துப் பேசுகிறார்கள். ப்ரேமத்தை வெளிப்படுத்துகிறார்கள். ப்ரேமமும் பக்தி தானே. பக்தி ச்ருங்காரமாக மாறிவிட்டது.அவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும், பகவானிடம் ஈடு பட்டு, அனுபவிக்கும் வழியை உன்னிடம் கற்றுக்கொண்டார்களோ ! உனக்குப் பின் வந்தவர்கள், இப்படிச் செய்தால் உன்னிடம் கற்றுக் கொண்டார்கள் எனலாம்;ஆனால், உன் திருத் தகப்பனார் கோஷ்டியில் சேர்ந்த வர்களே இவ்வாறான நிலையை அடைந்தார்கள் என்றால், அது ,அதிசயம் அல்லவா !
Hey….Goda….. with the desire to enjoy your beloved Lord ,like you, your elders transmute their bakthi into the prema
indulging in various ways such of those born of seperation , and union
- மாத : ஸமுத்தி தவதீ மதி விஷ்ணுசித்தம்
விசவோ பஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மந்யாம்
ஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||
வாக்கைக் கொடுத்த தாயே ! நீயே பெரிய பிராட்டி. அவளுக்கும், உனக்கும் வேற்றுமை இல்லை. விஷ்ணுவின் ஹ்ருதாயத்தில் சந்த்ரன் தோன்றினான்; நீயும் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டவளாய்த் தோன்றினாய்; சந்திரனைப்போல் சந்தோஷப் படுத்துகிறாய்; நீ சந்திர சஹோதரி ஆகிறாய்; உலகம் வாழ அமுதப் பாசுரங்களை அளித்தாய்; உனக்கு அம்ருத சம்பந்தம் உள்ளது; பாற்கடலில் உதித்த ,பிராட்டிக்கு உள்ள தன்மைகள் எல்லாம் உன்னிடம் உள்ளன; அதனால், பிராட்டியின் உடன்பிறந்தவள் என்றே கூறுகின்றனர்; தகப்பனாரோ விஷ்ணுசித்தர் —விஷ்ணுவிடம் சித்தத்தை உடையவர். பெரியாழ்வார் . நீங்கள் இருவரும் உலகங்கள் உய்யுமாறு அமுதத்தை, கிரணங்களாலும், வாக்குகளாலும் வாரி வழங்குகிறீர்கள்
Oh mother you are not different from Periya Piraatti. Moon appeared from the mind of Vishnu. You are having Vishnu in your mind…You are sister of Chandra . You have given sweet pasurams You and your father Vishnuchiththar are giving amrutha through rays and speeches (pasuram) for the salvation of the entire world
10.தாதஸ் து தே மதுபித : ஸ்துதிலேச வச்யாத்
கர்ணாம்ருதை : ஸ்துதி சதை ரந வாப்த பூர்வம் |
த்வந்மௌளி கந்த ஸு பகா முப ஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதா நுகுணம் ப்ரஸாதம் ||
ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து , அவனுக்கு அணிவித்த பிறகுதான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.
Goda…..your father had not got before, the title of “Periyaazhvaar” from the Bhagavan inspite of submitting hundreds and hundreds of pasurams . But after you garlanded Him with flower and thulsi garlands and after your submission of sweet pasurams your father –Vishnuchiththar —became “Periyaazhvaar
11.திக் தக்ஷிணாபி பரி பக்த்ரிம புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவா வதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹூ மாந பூர்வம்
நித்ராளு நாபி நியதம் நிஹிதா : கடாக்ஷா : ||
ஹே தேவி….நீ அவதரித்ததால், இந்தத் தக்ஷிண தேசமே ஸர்வோத்தரமாக ஆகிவிட்டது
ஸ்ரீ ரங்க பதியான ரங்கநாதன், உறங்குகிறவன் போல, தெற்குத் திக்கையே நோக்கி
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உன் அவதாரத்தை எதிர் நோக்கும் கருத்துடையான் ஆனான்
hey Devi….By your avathara in the south, the direction, though known as south became north of everything Srirangapathi’s looks even when He sleep are permanently fixed in that direction
- ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா : ||
கோதாப் பிராட்டியே——-கோதாவரி நதி உன் பெயரைத் தாங்கி உள்ளதால் அல்லவா, இந்த உலகத்தைத் தன்னுடைய தீர்த்தத்தால் நனைத்துப் புனிதமாக்குகிறது. கங்கை முதலிய நதிகளும் இங்கு கோதாவரி நதியில் வந்து தங்கித் தன பாவங்களைக் களைந்து ,புண்ய நதியாக ஆகிறது.
கோதா என்கிற உன் திருநாமத்தின் பெருமை வர்ணிக்க இயலாதது.
The river Godavari purifies the world by its theerththa as it bears your name “Goda’. The rivers such as Ganga mingles with the river Godavari at times and stay there long time to wash out papas and thereby become pure as sacred river The reason for all these is the importance of your “Nama” as Goda .
- நாகேசய ஸுதநு பக்ஷிரத : கதம்தே
ஜாத : ஸ்வயம் வரபதி :புருஷ : புராண : |
ஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா ;
ஸந்தர் சயந்தி பரிஹாஸகிர :ஸகீநாம் ||அழகான மெல்லிய திருமேனியை உடையவளே …”..நீ வரித்த புருஷன், பாம்பில் படுக்கிறான்;
பக்ஷியின் மீது அமர்ந்து செல்கிறான்; புராண புருஷன் …..மிக மிக வயதானவன்; நீ ,எப்படி இந்த வரனைத் தேர்ந்தெடுத்தாய் ….” என்று உன் தோழிகளின் பரிகாசப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறாயே
இவைகளைக் கேட்டு நீ பூரிக்கிறாய். குணமாகவே எடுத்துக் கொள்கிறாய். இவையெல்லாம் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன என்று உன் அன்பை வெளிப்படுத்துகிறாய்
Goda Devi….. Your sahis make fun and mockery telling that your bride-groom -elect reclines on a serpent , flying on a bird and a purana purusha You take all these as His virtues and that these denote “thatva” You show utmost affection on this Purusha
14.த்வத் புக்த மால்ய ஸூர பீக்ருத சாறு மௌளே :
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |
பத்யுஸ் தவேச்வரி மித : ப்ரதிகாத லோலா :
பர்ஹா த பத்ர ருசி மார சயந்தி ப்ருங்கா : ||
லோகேச்வரீ …நீ சூடிக் களைந்து , எம்பெருமான் அணியக் கொடுத்த மாலை, அவன் திருமுடிமேல்
அமர்ந்து வாசனை வீசுவதை உணர்ந்த வண்டினங்கள், அவன் அணிந்திருந்த வைஜயந்தி மாலையை விட்டு விட்டு, மேலே பறந்து ஒன்றுக்கொன்று தள்ளிக் கொண்டு ,வட்டமிட்டு, எம்பெருமான் திருமுடிக்கு மேலே மயில் தோகையால் ஆன குடை போல ஆகி அவனது திருமுடிக்கு நிழலைக் கொடுக்கிறது.
Hey, Goddess …honey–bees which were squeezing honey from Vaijayanthi garland adorned by the Lord in His chest ,
dashed upwards ,smelling the fragrance from the garland of yours which is now on His head competing one another and formed as a circle of peacock-feathers protecting His head as an umbrella
15.ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங் கமாபி
ராகாந் விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
கோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தீ ||
கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து, எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான். இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான். உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு; இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,உன் பெருமையைச் சொல்கிறது.
Hey—-goda—-Vaijayanthi garland is always full of fragrance;it’s always nearer to the heart of Emperuman; it’s having plenty of colour flowers ;it’s very beautiful; But, it has been lowered by your flower garland which is adorned on the crown of Emperumaan . This speaks your glory
__._,_.___
- த்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |
மஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் ||
கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான். தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி, அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன. அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம்வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது. நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா —-
The honey–suckers —bees—are having honey from the garland that you offered to Emperumaan. . With utmost joy, the sweet-voiced bees played the unparallelled and auspicious divine music at your svayamvara that includes exchange of garlands between both of You
17.விச்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ் ததலே ச கமலா ஸ்தந சந்த நேந |
ஆமோதி தோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தே நதேந சிரஸா தவ மௌளி மாலாம் ||
தாயே—-கோதா—-
பகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ; பகவானின் திருநாபியில், கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்; அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா ! அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில்,
மஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம், அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் . வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது; இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர். இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு, நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான் இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா ? அவனுக்கா?
He is the Supreme ruler—-He is having 3 fragrants—fragrant in His navel by the lotuses whose pollen dust becomes universe , fragrant in His chest by the sandal-paste on Mahalakshmi’s bosom, and fragrant in His twin feet
by the Vedhas —( tamil and sanskrit Vedas also)
But, ignoring all the three, He took your flower garland with His bent head . Is it glory to you ? or to Emperumaan?
18.சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதி வாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் ||
கோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்; உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;
அதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான். அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்
–ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே ! இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும் பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்
Goda! by receiving your upper cloth ( or taken by Him ) and fragrant flower garland , Sri Rangapathi appears to have qualified Himself for being crowned on the throne of abundent wealth and prosperity . His cloth is bhagyam to us and your upper cloth is bhagyam to Him