தனியன்—-தெரிவோம்—தெளிவோம்—14
—————————————————————-
கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் , தென் திருமல்லி நாடி செங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக்கிளி, அவள் தூய நற்பாதம் துணை நமக்கே.
இதுவும் திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளிய தனியன்.
இவருடைய சரிதச் சுருக்கம் முந்தைய (13) பகுதியில் உள்ளது.
தனியனின் சுருக்கமான அர்த்தம்
அழகு பொருந்திய பாஞ்சசன்னியம் என்கிற சங்கம், மாயனின் —
கண்ணனின் சிவந்த அதரத்தில் அமர்ந்து சுவைத்துக் குணம்
சொல்வதால், அதை, கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல்லாழி வெண்சங்கே —-
என்று வினவியவள் —-கேட்டவள்—சீலமிகு ஆண்டாள்
தெற்கு ஸ்ரீவில்லிபுத்தூரின் அரசி—
திருவரங்கனுக்குத் துழாய்மாலை ,தன்னுடைய குழலில்
சூடிக்கொடுத்தவள்—
திருமல்லி நாட்டின் சோலைக்கிளி—
அரங்கனின் சோலைக்கிளி—
இப்படிப்பட்ட ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையான இரண்டு
திருவடிகளே நமக்கு போக்யம் –நமக்குத் துணை
—
Sarvam Sree Hayagreeva preeyathaam