
இதை இத்துடன் நிறுத்தி, அடுத்ததான
,கடைசியாகச் சொன்னாரல்லவா —இது சம்பந்தமாக, வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி
, தன்னுடைய அக்ஷய ஆராதனத்தில் “தாது” வருஷ ஸ்லோகத்தில்,
விஸர்கத்தில் (ஸ்ருஷ்டியில் ), தாதா எனப்படும் ப்ரஹ்மா சிறந்தவர்—வேங்கடநாதன் என்கிற
ஸ்வாமி தேசிகன், வைத்யர் —தாதுவுக்கு நிகரானவர். அவர், நம்முடைய சங்கடங்களைப் போக்கி,
மங்கலத்தைக் கொடுப்பாராக —என்கிறார்.
இப்போது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–
ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
இதற்கு விளக்கம் , அடியேன் “கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில்
ஸ்ரீ காஞ்சி பேரரருளாளன் பத்ரிகையில்
173வதாக எழுதி இருக்கிறேன் ( மொத்தம் 1008 எழுதி இருக்கிறேன்—அடியேன் எழுதியதை
,அடியேனே சொல்லிக்கொள்ள வேண்டி இருக்கிறது—படிப்பவர்கள் க்ஷமிப்பார்களாக )
அதில், ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார். இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால்தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .
ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப்போல,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
வ்யாக்யான கர்த்தாக்கள், “நித்ய யோகேதி சாயினே……” என்கிறபடியே
, நித்ய ஸம்பந்திலேயாய் , வேங்கடசா வதாரோயம்…… என்கிற க்ரமத்திலே ,
பூர்வ ஸ்வபாவத்தில் அலர்மேல் மங்கையாய் நின்று , இவ்வவதராத்தில்,
“மனுஷயத் வேச மானுஷீ ” என்கிறபடியே குத்ருஷ்டி நிரசநோபயுக்தையான
ஆத்ம வித்யா ரூபையாயும் ,பக்தி பரம்பரா ரூபையாயும், பிராட்டி நிற்கிறபடியே
சொல்லிற்றாயிற்று ”
வேதாந்தார்த்தப் ப்ரதாயினே ஸூக்தி பரம்பரா ரூபையும் என்று, இவர்,
தமக்கு, திருவேங்கட முடையான் வேதாந்த தேசிகத்வ பட்டாபிஷேகம் பண்ணின
தசையிலும், இவர், குத்ருஷ்டிகளை நிரஸித்தபின்பு
“கவிதார்கிக ஸிம்ஹம் ” என்று, அருகேயுள்ளார் ஜயகோஷணை இட்ட தசையிலும்,
அவர்கள் இருவரும் களித்து, பூர்வம் நாம் பண்ணின சித்தாந்த பட்டாபிஷேகம் ,
ஸப்ரயோஜனமாய்த்தென்று “வேதாந்த தேசிகன் ” என்றும்,
“ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ரர் ” என்றும், அவர்கள், தமக்கிட்ட ப்ரஸித்த திருநாமம்
பெற்றபோதுமுண்டான “ஜய ஸ்ரீ” யை சொல்லிற்றாகவுமாம். அதாவது, பிராட்டி,
ஆத்ம வித்யா ரூபையாயும் , பக்தி பரம்பரா ரூபையாயும் இருப்பதை,
இந்த வார்த்தை சொல்கிறது.
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
பிராட்டி , ஆத்மா வித்யையாக இருக்கிறாள்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு முன்பாக “ச்ரியை நம : ” என்று
த்யாநித்து விட்டுத்தான் , பிறகு,
“ஸ்ரீ தராய நம : ” என்று பகவானைத் த்யாநிக்கிறோம்
.இப்படியாக, “ஸ்ரீமத்” என்பதற்கு, வ்யாக்யானம் சொல்லப்படுகிறது.
வேங்கடநாதார்யம்—-
———————-
திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய
சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல், அதையே காரணமாகக் கொண்டு,
உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களை த்
திருத்திப் பணிகொள்ள ,பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,
ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச்
சொல்லிற்று. ……..
உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
.
இதையே, திருவரங்கத் தமுதனார், தன்னுடைய இராமாநுச நூற்றந்தாதியில்,
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார். ச்லோகத்துக்கும்,
பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன; வர்ணாஸ்ரம தர்மங்கள்
பழைய நிலைக்கு வந்தன; பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.
” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .
இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”
வந்தே வேதாந்த தேசிகம்
—————————–
ஸ்வாமி தான் அருளிய “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில்,
வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||
என்று அருள்கிறார்.
அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு,
சிறியனான என்னை வேதாந்ததேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை
எடுத்துப் பாடச் செய்வதைப்போல, இந்த “தயா சதகம்”
என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக்கொண்டு துதிக்கச் செய்தான் ….
.என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.
இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச்
சூட்டினான். திருமலையில் உற்பத்தியானது,
திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.
வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று
பலகாலம் சொல்லி, வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..
கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில்
சென்று படுகுழியில் விழாமல் இருக்க, நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ
—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,
தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —
வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை
அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து
வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால்
“வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன்
ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன்
வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
அருளினார் என்று பார்த்தோம் வ்யாக்யானத்தை அனுபவித்தோம்
சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும்
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில்,
கூறுவார்.கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற
நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்
இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம்
என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
.இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார்.
நம்இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலா
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு
அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்
ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே
என்றும் , புகழ்ந்து உரைப்பர்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி, மேலும் சொல்வார்—–
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.
மஹான்களாலும்,ஆசார்ய ச்ரேஷ்டர் களாலும், கொண்டாடப்பட்டு, வ்யாக்யானங்கள்
செய்யப்பட்டுள்ள, ஸ்வாமி தேசிகனின் பெருமை, புகழ், தேஜஸ், கீர்த்தி, உள்ளிட்ட
யாவற்றையும் சொல்லும் , இந்தத் தனியன் அரிய பொக்கிஷம்; அருமருந்து;
மந்த புத்தியினனான ,அடியேனுக்குத் தெரிந்தவரை, பூர்வாசார்யர்கள் அருளியுள்ள
க்ரந்தங்கள் ,ஆசார்யர்களிடம் க்ரஹித்தவை—–முக்யமாக வைகுண்ட வாஸி
ஸ்ரீ ஸேவா ஸ்வாமி உபன்யாஸங்களில் க்ரஹித்தவை –இவைகளை
வ்யாக்யானமாக எழுதும்படியான பாக்யம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
பூர்வாசார்யர்களைத் த்யானித்து புந : புந : நமஸ்கரிக்கிறேன்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் திருவடிகளில் நமஸ்கரித்து,
அடியேனின் க்ருதக்ஜதையை மாநஸீகமாக ஸமர்ப்பிக்கிறேன்
உபன்யாஸமாகச் சொல்லும் பாக்யத்தை அருளிய ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனும்,
ஸ்ரீ ஹேமாப்ஜவல்லித் தாயாரும் ( அடியேன் க்ருஹத்தில்—-நித்ய வாஸம் ) ,இதை
எழுதி முடிப்பதற்கும் அனுக்ரஹித்தார்கள் .
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
பின் குறிப்பு:—
ராமாநுஜ தயா பாத்ரம் —-என்கிற இந்தத் தனியனின் அர்த்த விசேஷங்களைப் படித்தவர்கள்,
மகிழ்ச்சி அடைந்தால் , மகிழ்ச்சியை அனைத்து தேசிக பக்தர்களிடமும்
பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால், விருப்பம் தீர்மானமாக உருவெடுத்தால்,
வசதி உள்ளவர்கள் அச்சிட்டு, இலவசமாக,
ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரத்தன்று விநியோகிக்கலாம்.
—