108. ஸ்ரீரங்கம் வந்தான்
* 9ம் திருநாளில், பெரிய பிராட்டியாரின் ஊடலால் ஏற்பட்ட ”பிரணயக் கலகம்”
நம்மாழ்வாரால் ,தீர்க்கப்பட மகிழ்ந்து நின்றான்.
*அன்றே பெரிய பிராட்டியாரின் திருஅவதார தினமான பங்குனி உத்ரத்தில், சேர்த்தியில்
எழுந்தருளி இருக்கும்போது, ஸ்ரீ உடையவர் , ”கத்யத்ரயம்” சமர்ப்பித்து, சரணாகதி செய்ய,
சேதனர்கள் , இந்த ”பவிஷ்யதாசார்யரை ” அடியொற்றி, சரணாகதி செய்து , நம்வீடு வருவார் என்று
குதூகலித்தான்
*இதுவே பூலோக வைகுண்டம் என்றான்
*வைகுண்டத்தில் இருக்கும் ”வ்ரஜா” நதியே காவேரி நதி.
*வைகுண்டத்தில் இருக்கும் ஸ்ரீ வாஸுதேவனே ,ஸ்ரீரங்கநாதன் .
*விமானமே, ப்ரணவம்
*விமானத்தின் நான்கு கலசங்களே நான்கு வேதங்கள்
*விமானத்தினுள்ளே பள்ளிகொண்ட பெரிய பெருமாளே, ப்ரணவம் விவரிக்கும்”பரமாத்மா”
*காவிரியையும், கொள்ளிடத்தையும் மாலையாக்கிக் கொண்டான்
* தானே ”இக்ஷ்வாகு குலதனம்” என்றான்
, *”ஸதம்வோ அம்பா தாமானி ஸப்தச்ச —”என்று ப்ரஹ்மாவுக்குச் சொல்லி,
பரமபதத்தையும் சேர்த்து நூற்றெட்டுத் திவ்ய தேசங்களிலும் ”நானே” என்றான் ‘
*சந்த்ர புஷ்கரணி எனதே என்றான்
*படமெடுத்த ஆதிசேஷன் படுக்கையிலே படுத்திருக்கும் ”பெரிய பெருமாள்” நானே என்றான்
*.ப்ரணவாகார விமானத்தின் அடியில் சயனித்திருப்பது ”நானே” என்றான்
*விமானத்தின் மீது ”பரவாஸுதேவனாக ” இருப்பதும், நானே என்றான்
*ரங்க மண்டபத்தை , காயத்ரீ மண்டபம்” என்றும் , அங்குள்ள 24 தூண்களையும்
காயத்ரீ மந்த்ரத்தின் 24 அக்ஷரங்கள் என்றும் பூர்வாசார்யர்கள் புகழ, ஆமோதித்தான்
*ஏழு உலகங்களையும் , ஏழு ப்ராகாரங்களாக்கினான்
*வேதஸ்வரூபன் —பெரிய பெருமாள்
*வேதச்ருங்கம்— ப்ரணவாகார விமானத்தின் சிகரமாகியது
*வேதப்ரணவம் –ப்ரணவாகார விமானமாகியது
*வேதாக்ஷரமே –காயத்ரி மண்டபமாகியது
*அடியேன் , ,இத்திருத்தலத்தைக் கடைசியில் சொன்னாலும்
அர்ச்சாவதார ,முதல் அவதாரமாகினான்
*அண்டர்கோன் அணியரங்கனானான்
*திருப்பாவை முப்பதும் செப்பினாளை
உயர் அரங்கனாகிய தனக்கு,கண்ணி உகந்து அளித்தவளை
பெரியாழ்வார் பெற்றெடுத்தவளைத் ,
தன்னிடம் பேதைமை கொண்டவளை ,
மாலையிட
பெரியாழ்வார் கனவில் தோன்றி, கோதையைத் திருவரங்கம்
அழைத்துவரச் சொன்னான்
இங்கு பட்டர்,கோவில் பரிசனங்களிடம் ,அப்படியே தோன்றி,
அழகிய பூப்பல்லக்கில் ,கோதையை சந்நிதிக்கு அழைத்துவரச் சொன்னான்.
அவனின் திருவுளப்படி ஆண்டாள் திருமணத்தூண் அருகே வந்து
அரங்கனுக்கு மாலையிட,
அரங்கனும் மாலையிட.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனனாகிய ரங்கநாதன் வந்து
ஆண்டாள் கைத்தலம்பற்றி , தீவலம் செய்து,
பொரி முகம் தட்ட , செம்மை உடைய தன்னுடைய திருக்கரத்தால்,
கோதையின் தாள் ( திருவடி )பற்றி , அம்மி மிதித்து,
வாய்நல்லார் நல்ல மறை ஓதும் மந்திரம் முழங்க ,
பெரியாழ்வார், கோதையைக் ”கன்யாதானம்” செய்ய,
நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதன், கோதாமணாளனாக ஆனான்.
*துலுக்க நாச்சியாரின் , இஷ்ட மணாளனானான்
*சேரகுலவல்லியின் , வீர மணாளனானான்
*குலசேகரன், படியாய்க் கிடக்கப் பவள வாய்க் காட்டிப் பரிவுகொண்டான்
*.பெரிய திருவடி அனவரதமும் அமர்ந்து இருந்து அஞ்சலி செய்ய , அருள் புரிந்தான்
*திருவிண்ணாழித்திருச் சுற்றில், பூமிக்கு அடியில் சாளக்ராம எம்பெருமான்கள்
ஏராளமாக வாசம் செய்ய, அங்கு பக்தர்கள் ,மண்டியிட்டு வலம் வருவதை ,வழக்கமாக்கினான்
*திருமங்கை ஆழ்வார் பிரார்த்தனையை ஏற்று, ”திருவத்யயன உத்ஸவத்தில்” , வேதங்களோடு
திருவாய்மொழியையும் திருச்செவி சாற்றத் திருவுள்ளம் கொண்டான்
*விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி
திருவர்மார்பன் கிடந்த வண்ணனானான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும்
பாசுரங்கள் ,பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்
தொடர்ச்சி—–நாளை ( 8–01–2017 ) ஞாயிறு — வைகுண்ட ஏகாதசி ——அன்று-
—இருந்தும் ,கிடந்தும், நின்றும்–6–தொடர்ச்சி
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும்
பாசுரங்கள் ,பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்
*இவன் சேர்த்தி ஸேவை தரும் ரங்கன்
*சித்ரா பௌர்ணமி அன்று, காவேரித் தாயாருடன் சேர்த்தி
*சித்திரையில், சேரகுல வல்லியுடன் சேர்த்தி
*பங்குனி ஆயில்யத்தில் , உறையூரில் கமலவல்லியுடன் சேர்த்தி,
*பங்குனி உத்ரத்தில் ,பெரிய பிராட்டியாருடன் சேர்த்தி
*இவனே, காவேரி ரங்கன்
*இவனே கஸ்தூரி ரங்கன்
*இவனே பரிமள ரங்கன்
*இவனே க்ஷீராப்தி ரங்கன்
*இவனே இக்ஷ்வாகு குல ரங்கன்
*இவனே பெரியபெருமாள் ரங்கன்
*இவனே நம்பெருமாள் ரங்கன்
*இவன் கருமணி ரங்கன்
*இவன் கோமள ரங்கன்
*இவனே கோதையின் ரங்கன்
*இவனே வைபோக ரங்கன்
*இவனே முதன்முதலில், அரையர் ஸேவை
கொண்டருளிய ரங்கன்
*இவனே தினமும், வெண்ணெய் அமுதுண்ணும் ரங்கன்
*இவனே ”திறம்பா ”வழிகாட்டும் ரங்கன்
*இவனே”கபா”அலங்கார ரங்கன்
*இவனே ”கோண வையாளி ”நடைபோடும் ரங்கன்
*இவனே ஐப்பசியில் ,யாவும் தங்கமான ரங்கன்
*இவனே ,தாயின் பரிவுடன் ”பல்லாண்டு” பாடப்பெற்ற ரங்கன்
*இவனே பங்குனியில் காவிரிக்கரையில்,தயிர்சாதமும், மாவடுவும்
விரும்பி ஏற்கும் ரங்கன்
* இவனே , அடியார்களை அரவணைக்கும் ரங்கன்
* இவனே வைணவத்தின் ”ஆணி வேரான ”அரங்கத்தின் அப்பன், ரங்கன்
* இவனே அடியார்க்கு ஆட்படுத்தும் ரங்கன்
* இவனே, தானே முக்தனாக இருந்து, வைகுண்ட ஏகாதசியன்று,
பரமபதத்தைக் காட்டும் ரங்கன்
* இவனே பணியைப் பத்துகொத்தாக்கிப் பணிகொள்ளும் ரங்கன்
* இவனே இராமானுசரை,”நெடுநாள் தேசாந்திரம் சென்று ,மிகவும் மெலிந்தீரே”
என்று தாயைவிட, அதிகப் பரிவு காட்டிய ரங்கன்
*இவனே ப்ரஹ்மாதி ராஜன்
*இவனே இந்திராதி ராஜன்
*இவனே நித்யஸூரிகளின் ராஜன்
*இவனேமுக்தர்களின் ராஜன்
*இவனே ராஜாதி ராஜன்
*இவனே வைகுண்ட ராஜன்
*இவனே ஸுர ராஜ ராஜன்
*இவனே அகிலலோக ராஜன்
*இவனே ஸ்ரீரங்க பத்ரன்
*இவனே ஆனந்தரூபன்
*இவனே நித்யானந்தரூபன்
*இவனே ரமணீயரூபன்
*இவனே ஸ்ரீரங்கரூபன்
*இவனே லக்ஷ்மிநிவாஸன்
*இவனே ஹ்ருத்பத்ம வாஸன்
*இவனே க்ருபாதி வாஸன்
*இவனே ஸ்ரீரங்க வாஸன்
*இவனே ,எல்லாமும், எல்லா எம்பெருமான்களும்
ஏனெனில்,
எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் ,இவனிடம்
தினமும் சாயரக்ஷையில் க்ஷீரான்ன நைவேத்யத்தின்போது,
, 108 சரமாலைகளைச்சாற்றிக்கொண்டு ”தர்பார் ஸேவை ”நடக்கிறது—
*இவனை ஸ்தோத்தரிக்க , ஆதிசங்கரர் வந்தார்
*இவனை ஸ்தோத்தரிக்க ஸ்ரீ மத்வர் வந்தார்
*இவனுக்கு கைங்கர்யம் செய்த ஆசார்யர்கள்,கணக்கிலடங்காது.
ஸ்ரீரங்க வாஸம் செய்து, பற்பலக் கைங்கர்யங்கள் செய்த சில ஆசார்யர்கள்
*ஸ்ரீமன் நாதமுனிகள்,
*உய்யக்கொண்டார் ,
*மணக்கால் நம்பி,
*ஸ்ரீ ஆளவந்தார்,
*திருவரங்கப் பெருமாள் அரையர்
*பெரிய நம்பிகள்,
*எம்பெருமானார் என்கிற ஸ்ரீ உடையவர்
*முதலியாண்டான்
*கந்தாடையாண்டான்,
*கூரத்தாழ்வான்,
*திருக்குருகைப் பிரான் பிள்ளான்,
*எம்பார்,
*திருவரங்கத்தமுதனார்
*ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்
*பட்டர்,
*நஞ்சீயர் ,
*நடாதூரம்மாள்
*பராங்குசதாஸர்
*பிள்ளை அமுதனார்,
*பிள்ளை உறங்காவில்லி தாஸர்
*பிள்ளை லோகாசார்யர்
*பெரியவாச்சான் பிள்ளை
*மாறனேரிநம்பி
*வங்கிபுரத்தாச்சி
*வடக்குத் திருவீதிப்பிள்ளை
*வடுக நம்பி
*நம்பிள்ளை,
*அநந்தாழ்வான்
*ஈச்வர முனிகள்
*எங்களாழ்வான்
*கூரநாராயண ஜீயர்
*சொட்டை நம்பிகள்
*திருக்கச்சிநம்பி
*திருக்கண்ணமங்கையாண்டான் ,
*திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,
*திருமாலையாண்டான்,
*திருவாய்மொழிப்பிள்ளை
*பின்பழகிய பெருமாள் ஜீயர்
*பெரிய ஆச்சான் பிள்ளை,
*அழகியமணவாளப் பெருமாள் ஜீயர் ,
*கூர குலோத்துங்க தாசர் ,
*திருவாய்மொழிப்பிள்ளை ,
*பெரிய ஜீயர் என்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள்
இப்படி எண்ணிலா ஆசார்யர்கள் , இவனிடம் மோகித்து, பக்தி மேலிட்டு,
வாசிக, காயிக , லிகித கைங்கர்யங்கள் செய்துள்ளனர்
தியாகாஜ ஸ்வாமிகள், பஞ்சரத்னமே பாடி இருக்கிறார்
இவைகளை எல்லாம், கேட்டுப் பரவசமான ஜீவாத்மாக்கள் –சேதனர்கள் ,
”ரங்கா—ரங்கா—” என்று மெய்சிலிர்க்கக் கூவினர்; ஆடினர்;
ரங்கனின் புகழ் பாடினர்
ரங்கனை அடைய ஆவல் கொண்டனர் ; அவன் திருவடி நிழலில்
இளைப்பாரத் தாபப்பட்டனர்
பெரிய பெருமாள் , ஆதிசேஷனின் அரவணையில் , இவை அறிந்து ஆனந்தமடைந்தான்
நம்பெருமாளோ,
இருந்தும், கிடந்தும், நின்றும் –இங்கேயே பல்லாண்டாக நின்றும்–அதன் பயனாக,
நம்பிள்ளைகளைத் திரும்பப் பெறுவோம் என்கிற ஆனந்தத்தில் ஸேவை சாதித்தான்
ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்
செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும்
அடைவதில்லை.
காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்
The glory of Namperumal
Leave A Response