ரிஷிகள் மேன்மையானவர்கள்தான்—
தங்களுடைய தவ வலிமையால், பகவானை அடைந்துவிடலாம் என்று திடமாக நம்பி
தவத்தில் ஊண் உறக்கமில்லாது ஈடுபடுபவர்கள்—-
ஆனால்—-
ஆழ்வார்கள், பகவானுடைய தயையே ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு,
”பக்தி செய்து, ப்ரபத்தி செய்து பகவானைப் பிடிப்பவர்கள்—-
முனிவர்கள் —ரிஷிகள்—-ஸம்ஸார துக்கத்துக்குப் பயப்பட்டு, பகவானை அடைய
தபஸ் ஸில் ஈடுபட்டார்கள் —–
ஆழ்வார்களோ, பகவானைப் பிரிந்த துயரில் வாடி, மறுபடியும் பகவானை அடைய
திவ்யதேசம் தோறும் சென்று அவனைப்பாடிப்பாடி, பரவசப்பட்டவர்கள் —
முனிவர்கள் தேவலையா ? ஆழ்வார்கள் தேவலையா ?
எந்த வழி உங்களுக்கு ? தபஸ் ஸா ? பக்தி அல்லது ப்ரபத்தியா ?
( பகவானை அடைய தாபப்பட்டால் )
—